மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் பிளேக் மாரியம்மன் கோவிலை இடிக்க முயற்சி: பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 100 ஆண்டுகள் பழமையான பிளேக் மாரியம்மன் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறை முயற்சி. திமுக முன்னாள் நிர்வாகியின் தூண்டுதலால் நடப்பதாக கூறி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.


கோவை: கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக உள்ளது.

கோவிலின் அருகே திமுக முன்னாள் நிர்வாகி ஒருவரின் அப்பார்ட்மென்ட் உள்ளது. இந்தக் கட்டிடத்தை கோவில் மறைப்பதாக கூறி அதன் உரிமையாளர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும், திமுகவைச் சேர்ந்த காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் அவர்களும் கோவிலை இடிப்பது சம்பந்தமாக கோவில் நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த தகவலை அறிந்த பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், அதிமுக நகர்மன்ற உறுப்பினர் வனிதா, திமுக நகர்மன்ற உறுப்பினர் அனிதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு திரண்டனர்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறுகையில், "யாருக்கும் தொல்லையின்றி மேம்பாலத்துக்கு அடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் கோவிலை திமுக முன்னாள் மூத்த நிர்வாகியின் தூண்டுதலின் பேரில் நெடுஞ்சாலைத் துறை இடிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். புகார் கடிதம் கொடுத்தவர்களின் கட்டிடமே கொடுக்கப்பட்ட அனுமதியை விட கூடுதலாக ஒரு மடங்கு உயர்த்தி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. அது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கோவிலை இடிக்க முன்வருவதை கண்டிக்கிறோம். கோவிலை தொட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோவில் இடிப்பதை நெடுஞ்சாலைத் துறை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...