மேட்டுப்பாளையம் நகராட்சியில் தூய்மை பணி குறைபாடு: அதிமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்

மேட்டுப்பாளையம் நகராட்சியின் 22வது வார்டில் தூய்மை பணி குறைபாட்டை கண்டித்து அதிமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகளின் உறுதிமொழிக்குப் பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியின் 22வது வார்டு பகுதியில் சரியான முறையில் தூய்மை பணி மேற்கொள்ளப்படாததை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்பாராத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பகுதியான பெருமாள் லே அவுட், ஜெகநாதன் லே அவுட், சுப்பம்மா லே அவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சரியான முறையில் தூய்மை பணி மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை எதிர்த்து, அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ராஜேஷ் மற்றும் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் சேர் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பெருமாள் லே அவுட் இரண்டாம் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சாலைகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும், சாக்கடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தூய்மை பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நியமித்துள்ளதாகவும், பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தனர். இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...