கன மழை காரணமாக கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (15.10.2024) நடைபெற இருந்த மேயரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (15.10.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கன மழையின் காரணமாக நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் வழக்கமாக காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறும். இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை மேயரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்து பயன்பெற முடியும். இந்த மனுக்களின் மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கன மழை காரணமாக இந்த வாரம் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...