பொள்ளாச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்றம்

பொள்ளாச்சி அருகே 10 நெம்பர் முத்தூரில் சமுதாய நல்லிணக்கம், பெண்கள் உடல்நலம் மற்றும் பாரம்பரிய கலையை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள 10 நெம்பர் முத்தூரில் காராள வம்ச கலை சங்கம் குழு சார்பில் பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், பெண்கள் உடல் நலம் பேணிக்காக்கவும் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் முருகபெருமாள், வள்ளி திருமணம் போன்ற பாரம்பரிய கதைகளை நினைவு கூறும் வகையில் வள்ளி கும்மி நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் நித்தியானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொள்ளாச்சி பகுதியில் காராள வம்ச கலைச்சங்கம் சார்பில் 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் உடல்நலம், மனநலம் பேணி காக்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு பயிற்சி எடுத்தவர்கள் உடலில் இருந்த குறைபாடுகள் நீங்கியுள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்," என்றார்.

மேலும் அவர், "நமது கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கின்ற வகையில் விளங்கும் வள்ளிக்கும்மியை மீட்டெடுத்து ஒரே இடத்தில் பதினாறாயிரம் பேரை அரங்கேற்றம் செய்து உலக சாதனை படைத்தனர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டினருக்கும் இந்த பயிற்சி சென்று கொண்டிருக்கிறது. கட்சி பாகுபாடு இல்லாமலும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த வள்ளி கும்மியை கற்று வருகின்றனர்," என்று தெரிவித்தார்.

"அரசியல் ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு சமுதாய நல்லிணக்கத்திற்கு ஒரு வழியாக வள்ளி கும்மி மாறிக் கொண்டிருக்கிறது," என்று நித்தியானந்தன் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...