பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு: தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டம் மற்றும் மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 919 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மலை மாவட்டங்களிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேட்டுப்பாளையம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடியாக உயர்ந்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணை இருந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று (அக்டோபர் 13) காலை 6 மணி நிலவரப்படி 91.50 அடியாக உள்ளது.

மேலும் அணைக்கு வினாடிக்கு 919 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையிலிருந்து நீர் திறப்பு ஏதுமில்லை. இன்று காலை 6 மணி நிலவரப்படி குந்தாவில் 37, கெத்தையில் 46, பரளியில் 28, பில்லூர் அணை பகுதியில் 21, அவலாஞ்சி பகுதியில் 15 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

நேற்றிரவு (அக்டோபர் 12) 9 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 86.50 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி தற்போது அணையின் நீர் மட்டம் 91.50 அடியாக ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...