தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கோவையில் இருந்து எட்டு மாணவர்கள் தேர்வு

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கோவையில் இருந்து எட்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.


Coimbatore: கொல்கத்தாவில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்ற எட்டு மாணவ, மாணவியர் தேர்வாகியுள்ளனர்.

இந்த தேசிய போட்டிக்கான தகுதி தேர்வு ஈரோடு கரட்டுப்பாளையம் அரசுப் பள்ளியில் அக்டோபர் 9 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து 120 பேர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்ற 15 பேர் பங்கேற்றனர்.

தேர்வாகியுள்ள எட்டு மாணவர்களின் விவரம் பின்வருமாறு:

1. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த ரியாஸ்ரீ

2. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த ரேச்சல்

3. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த சரண் பிரியா

4. ஸ்டேன்ஸ் பள்ளியின் பாகித் அகமத்

5. ஸ்டேன்ஸ் பள்ளியின் ஜாய் ஆன்ட்ரியா

6. அவிலா கான்வென்டைச் சேர்ந்த அக்ஷரா

7. சபர்பன் பள்ளியின் மோனிகா

8. சபர்பன் பள்ளியின் மவுனேஷ்

இந்த மாணவர்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் சையத் இப்ராஹிம் ஆவார். தேர்வான மாணவர்களையும் பயிற்சியாளரையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் அருணா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்தன் ஆகியோர் பாராட்டினர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...