கோவை: லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் பத்திரப்பதிவு விஷயமாக வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியபோது, அங்கு 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து கருப்பசாமி லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கருப்பசாமியிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். நேற்று மாலை 7 மணியளவில் கருப்பசாமி அந்த பணத்தை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார். அப்போது பணத்தை வாங்கிய இளநிலை உதவியாளர் பூபதி ராஜா மற்றும் சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும், சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலினின் நான்கு சக்கர வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது, அதில் கணக்கில் வராத 13 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இன்று அக்டோபர் 10 அன்று நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினர்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இதே அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த மாதம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.5 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்ந்து நடக்கும் ஊழல் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...