கோவை: லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் பத்திரப்பதிவு விஷயமாக வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியபோது, அங்கு 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து கருப்பசாமி லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கருப்பசாமியிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். நேற்று மாலை 7 மணியளவில் கருப்பசாமி அந்த பணத்தை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார். அப்போது பணத்தை வாங்கிய இளநிலை உதவியாளர் பூபதி ராஜா மற்றும் சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும், சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலினின் நான்கு சக்கர வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது, அதில் கணக்கில் வராத 13 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இன்று அக்டோபர் 10 அன்று நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினர்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இதே அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த மாதம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.5 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்ந்து நடக்கும் ஊழல் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகிறது.

Newsletter

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...