கோவை: லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் பத்திரப்பதிவு விஷயமாக வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியபோது, அங்கு 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து கருப்பசாமி லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கருப்பசாமியிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். நேற்று மாலை 7 மணியளவில் கருப்பசாமி அந்த பணத்தை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார். அப்போது பணத்தை வாங்கிய இளநிலை உதவியாளர் பூபதி ராஜா மற்றும் சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும், சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலினின் நான்கு சக்கர வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது, அதில் கணக்கில் வராத 13 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இன்று அக்டோபர் 10 அன்று நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினர்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இதே அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த மாதம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.5 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்ந்து நடக்கும் ஊழல் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகிறது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...