உடுமலை அருகே அரசு பேருந்து மோதி உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோனி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் குரு பிரசாத் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் பலன் இல்லாமல் போனது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோனி பகுதியில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடுமலை அருகே உள்ள தாந்தோனி பகுதியில் தாராபுரம் சாலையில் இருந்து உடுமலையை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், உடுமலையில் இருந்து தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் குரு பிரசாத் (27) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.



எதிர்பாராத விதமாக அரசு பேருந்து குரு பிரசாத்தின் இருசக்கர வாகனத்தை மோதியது. இதில் குரு பிரசாத் சுமார் 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குரு பிரசாத் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், பேருந்து மோதிய வேகத்தில் ஹெல்மெட் உடைந்து போனதால் அவரால் உயிர் தப்ப முடியவில்லை.

உடுமலை அருகே தும்பலபட்டியைச் சேர்ந்த குரு பிரசாத்துக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...