உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்பர் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா

உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்பரின் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் தேவராட்டம் ஆடி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரின் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட எத்தலப்பரின் முழு உருவ சிலையும், திருமூர்த்தி மலையில் அமைக்கப்பட்ட மணிமண்டபமும் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாரம்பரியமான தேவராட்டம் ஆடியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி மற்றும் பொதுமக்கள் பலர் எத்தலப்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுதந்திரப் போராட்ட வீரரின் முழு திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வீரபாண்டிய கட்டபொம்மன் கழகம் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...