கோவை பன்னீர்மடையில் திருப்பதி பிரம்மோற்சவம் போல கருட சேவை: பக்தர்கள் திரண்டனர்

கோவை பன்னீர்மடையில் உள்ள மூன்று கோயில்களில் திருப்பதி பிரம்மோற்சவம் போன்று கருட சேவை நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டனர். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடையில் அமைந்துள்ள மூன்று முக்கிய கோயில்களில் திருப்பதி பிரம்மோற்சவத்தை போன்று கருட சேவை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை போன்று இங்கும் கருட சேவை நடத்தப்பட்டது.



முதலில் ஶ்ரீதேவி பூதேவி சமேதர உலகளந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெண் பக்தர்கள் கும்மியடித்தனர். பஜனை குழுவினரின் பாடல்களுடன் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

பன்னீர்மடை கிராமத்தின் முக்கிய வீதிகளில் பெருமாள் திருவீதி உலா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்தபோதிலும், பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் செல்வராஜ், செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் டி.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மேற்கொண்டிருந்தனர். நிர்வாகிகள் பி.டி.கோபாலசாமி, செல்வராஜ், தம்பி பாலகிருஷ்ணன், மோகன்ராஜ், ஜெயபால், பரணி, ஜெயசந்திரன், விஷ்வநாதன், பொன்னுசாமி, ராமசாமி ஆகியோரும் ஏற்பாடுகளில் உதவினர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...