கோவை பன்னீர்மடையில் திருப்பதி பிரம்மோற்சவம் போல கருட சேவை: பக்தர்கள் திரண்டனர்

கோவை பன்னீர்மடையில் உள்ள மூன்று கோயில்களில் திருப்பதி பிரம்மோற்சவம் போன்று கருட சேவை நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டனர். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடையில் அமைந்துள்ள மூன்று முக்கிய கோயில்களில் திருப்பதி பிரம்மோற்சவத்தை போன்று கருட சேவை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை போன்று இங்கும் கருட சேவை நடத்தப்பட்டது.



முதலில் ஶ்ரீதேவி பூதேவி சமேதர உலகளந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெண் பக்தர்கள் கும்மியடித்தனர். பஜனை குழுவினரின் பாடல்களுடன் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

பன்னீர்மடை கிராமத்தின் முக்கிய வீதிகளில் பெருமாள் திருவீதி உலா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்தபோதிலும், பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் செல்வராஜ், செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் டி.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மேற்கொண்டிருந்தனர். நிர்வாகிகள் பி.டி.கோபாலசாமி, செல்வராஜ், தம்பி பாலகிருஷ்ணன், மோகன்ராஜ், ஜெயபால், பரணி, ஜெயசந்திரன், விஷ்வநாதன், பொன்னுசாமி, ராமசாமி ஆகியோரும் ஏற்பாடுகளில் உதவினர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...