திருப்பூரில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் போது வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு, 9 பேர் படுகாயம்

திருப்பூர் பாண்டியன் நகரில் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 9 பேர் படுகாயமடைந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன.



திருப்பூர்: திருப்பூர் பாண்டியன் நகர் சத்யா காலனி பொன்னம்மாள் நகர் பகுதியில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

கார்த்திக் என்பவரின் வீட்டில், அவரது மைத்துனர் சரவணகுமார் கோவில் திருவிழாக்களுக்கான பட்டாசுகளை சட்டவிரோதமாக தயாரித்து வந்துள்ளார். முறையான அனுமதி பெறாமல், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இந்த பணி நடைபெற்றுள்ளது.

வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நாட்டு வெடிமருந்துகள் திடீரென வெடித்து சிதறின. இதில் ஒருவரின் உடல் சிதறி, 100 மீட்டர் தொலைவிற்கு வீசப்பட்டது. கார்த்திக் வீட்டின் முன்புறம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.



அருகிலிருந்த மளிகை கடை ஒன்றும் முற்றிலும் சேதமடைந்தது.



எதிர்புறத்தில் இருந்த 20 ஓட்டு வீடுகளும் பெரும் சேதத்திற்கு உள்ளாகின.

திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.



வெடிக்காத வெடிபொருட்கள் சிதறிக் கிடந்ததால், பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.



இந்த வெடி விபத்தில் அடையாளம் தெரியாத ஒரு பெண், 9 மாத குழந்தை ஆலியா செர்ரின், மற்றும் குமார் ஆகிய மூவர் உயிரிழந்தனர். மேலும் மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகர காவல் ஆணையர் லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடிக்காத பொருட்கள் மீது தண்ணீர் அடித்து அணைக்குமாறு உத்தரவிட்டனர். உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் கார்த்திக் மற்றும் வெடிபொருட்களை சேகரித்து வைத்திருந்த சரவணகுமார் ஆகிய இருவரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிக்காமல் இருந்த 50 கிலோ வெடிப்பொருட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

வெடி விபத்தின் போது வீட்டிற்குள் சிக்கியிருந்த 4 நாய்களை சுலோச்சனா நாய்கள் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் உயிருடன் மீட்டு, காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...