திருப்பூரில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் போது வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு, 9 பேர் படுகாயம்

திருப்பூர் பாண்டியன் நகரில் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 9 பேர் படுகாயமடைந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன.



திருப்பூர்: திருப்பூர் பாண்டியன் நகர் சத்யா காலனி பொன்னம்மாள் நகர் பகுதியில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

கார்த்திக் என்பவரின் வீட்டில், அவரது மைத்துனர் சரவணகுமார் கோவில் திருவிழாக்களுக்கான பட்டாசுகளை சட்டவிரோதமாக தயாரித்து வந்துள்ளார். முறையான அனுமதி பெறாமல், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இந்த பணி நடைபெற்றுள்ளது.

வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நாட்டு வெடிமருந்துகள் திடீரென வெடித்து சிதறின. இதில் ஒருவரின் உடல் சிதறி, 100 மீட்டர் தொலைவிற்கு வீசப்பட்டது. கார்த்திக் வீட்டின் முன்புறம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.



அருகிலிருந்த மளிகை கடை ஒன்றும் முற்றிலும் சேதமடைந்தது.



எதிர்புறத்தில் இருந்த 20 ஓட்டு வீடுகளும் பெரும் சேதத்திற்கு உள்ளாகின.

திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.



வெடிக்காத வெடிபொருட்கள் சிதறிக் கிடந்ததால், பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.



இந்த வெடி விபத்தில் அடையாளம் தெரியாத ஒரு பெண், 9 மாத குழந்தை ஆலியா செர்ரின், மற்றும் குமார் ஆகிய மூவர் உயிரிழந்தனர். மேலும் மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகர காவல் ஆணையர் லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடிக்காத பொருட்கள் மீது தண்ணீர் அடித்து அணைக்குமாறு உத்தரவிட்டனர். உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் கார்த்திக் மற்றும் வெடிபொருட்களை சேகரித்து வைத்திருந்த சரவணகுமார் ஆகிய இருவரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிக்காமல் இருந்த 50 கிலோ வெடிப்பொருட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

வெடி விபத்தின் போது வீட்டிற்குள் சிக்கியிருந்த 4 நாய்களை சுலோச்சனா நாய்கள் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் உயிருடன் மீட்டு, காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...