கோவை பார்க் குளோபல் பள்ளி மாணவர் சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்

கோவை பார்க் குளோபல் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த், குஜராத்தில் நடைபெற்ற சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரிதமிக் யோகாவில் தங்கப் பதக்கம் வென்றார்.


கோவை: கோவை பார்க் குளோபல் பள்ளி (சிபிஎஸ்இ) மாணவர் ஒருவர் சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2024 அக்டோபர் முதல் வாரத்தில் குஜராத்தில் நடைபெற்ற 2024-2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் பார்க் குளோபல் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த் கலந்து கொண்டார். இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரிதமிக் யோகாவில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த தேசிய அளவிலான போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பார்க் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி, இந்த சாதனையை படைத்த மாணவரையும், அவருக்கு பயிற்சி அளித்து ஊக்குவித்த பயிற்சியாளரையும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...