கோவை வ.உ.சி. பூங்காவில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. பூங்கா, உயிரியல் பூங்கா, முதியோர் பூங்கா, கணிதப் பூங்கா மற்றும் உணவுக்கூடத்தை ஆய்வு செய்தார். பூங்காக்களின் பராமரிப்பு மற்றும் புதிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதித்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் உள்ள வ.உ.சி. பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண் 83-ல் அமைந்துள்ள இப்பூங்காக்களின் தற்போதைய நிலை குறித்து அவர் நேரில் பார்வையிட்டார்.

மேயர் ரங்கநாயகி, வ.உ.சி. பூங்கா வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கணிதப் பூங்காவின் பணிகளை ஆய்வு செய்தார். இப்பூங்கா குழந்தைகளுக்கு கணித கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.



வ.உ.சி. பூங்கா எதிரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவுக் கூடத்தையும் (Food Street) மேயர் பார்வையிட்டார். இந்த உணவுக் கூடம் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான உணவு வகைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



அடுத்ததாக, வ.உ.சி. முதியோர் பூங்காவை பார்வையிட்ட மேயர், பூங்காவின் தூய்மை நிலை குறித்து கேட்டறிந்தார். பூங்காவை சுத்தமாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.



ஆய்வின் ஒரு பகுதியாக, ராம் நகர் மற்றும் ஆர்.ஆர்.சாமி லைன் பகுதியில் மாநகராட்சியின் நவீன வாகனம் மூலம் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு பணிகளையும் மேயர் நேரில் பார்வையிட்டார். சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் சுமா, செயற்பொறியாளர் கருப்பசாமி, கால்நடை மருத்துவர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...