கோவையில் RSS அணிவகுப்பு ஊர்வலம்: 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பு

உச்சநீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, கோவை சிவானந்தா காலனியில் RSS தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை சிவானந்தா காலனியில் இன்று நடைபெற்ற ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) அணிவகுப்பு ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.



உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.



RSS-ன் ஸ்தாபன தினமான விஜயதசமியன்று ஆண்டுதோறும் நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.



இந்த ஆண்டு RSS-ன் நூற்றாண்டு துவக்கத்தை முன்னிட்டு கோவையில், வடவள்ளி மற்றும் சிவானந்தா காலனி ஆகிய இரு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.



சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஊர்வலம், அப்பகுதியில் துவங்கி முக்கிய சாலைகள் வழியாக நல்லாம்பாளையம் சாலை அம்ருதா பள்ளி மைதானத்தில் நிறைவுபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சியும் நடைபெற்றது.



ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு எவ்வித சம்பவங்களும் இன்றி அமைதியாக நிறைவடைந்தது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...