உடுமலை அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் புறக்கணிப்பு: முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு கண்டனம்

உடுமலையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் இடம்பெறாததால் சர்ச்சை. முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் இடம்பெறாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம், தலைவர்கள் பூங்கா, நீரோட்டம் பூங்கா, அசோகா ஸ்தோபி சந்திப்பு ஆகியவை பராமரிக்கப்பட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் அமைச்சர் கயல்விழியின் பெயர் அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் இடம்பெறவில்லை. இது அமைச்சரின் ஆதரவாளர்களையும் திமுகவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரம் உடுமலை, தாராபுரம், சென்னை போன்ற பல்வேறு இடங்களில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், "அரசு விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் பெயர், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் பத்மநாபன் பெயர் உள்ள நிலையில் தற்போதைய அமைச்சர் கயல்விழி பெயர் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

மேலும் அவர், "கல்வெட்டு திறப்பு விழாவின் போது அமைச்சர் சாமிநாதன் கவனிக்கவில்லையா? இல்லை முன்கூட்டியே கல்வெட்டு படம் காட்டவில்லையா? இல்லை அமைச்சருக்கு தெரிந்து தான் இந்த தவறு நடந்துள்ளதா என தெரியவில்லை. சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட திராவிட மாடல் திமுக இயக்கத்தில் ஒரு பட்டியலினை அமைச்சரின் பெயரை திட்டமிட்டு புறக்கணிப்பு செய்தது ஒட்டுமொத்த மக்களின் கோபத்தை கிளறி உள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...