ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்கம்

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்க விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்ற பயிலரங்கமும் நடத்தப்பட்டது.


கோவை: ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த துவக்க விழாவில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி Dr.ரகுபதி வேலுசாமி, நிர்வாக மருத்துவ இயக்குனர் Dr. சந்தோஷ் குமார் டோரா, மருத்துவ இயக்குனர் - (Operations) Dr.சந்தோஷ், இருதயவியல் துறை தலைமை மருத்துவர் Dr.சாம்பசிவம், ஹார்ட் பெயிலியர் கிளினிக் மற்றும் எக்கோ கார்டியாலஜி துறை தலைமை மருத்துவர் Dr. சண்முகசுந்தரம், ஆகியோர் பங்கேற்றனர்.



நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆரம்பகால நோயறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரத்தியேக கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துவக்க விழாவின்போது, நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சிகிச்சை உத்திகள் குறித்த மருத்துவத் தொடர் கல்வி (CME) பயிலரங்கம் நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் இருதியவியல், நுரையீரல் சிகிச்சை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் குறித்து விளக்கப்படங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.



இந்த பயிலரங்கில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.



ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் இருதயவியல் துறை தலைமை மருத்துவர் Dr.சாம்பசிவம் கூறுகையில், "நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் குறித்து மருத்துவர்கள் மத்தியில் சிறந்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிறந்த முறையில் பயனடையும் வகையில் இந்த கிளினிக் துவங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்திற்கான முக்கிய அறிகுறி என்றும் அத்தகைய அறிகுறி தென்படும் போது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் குணமடையலாம்" என்றும் அவர் கூறினார்.

இந்த பிரத்தியேக கிளினிக்கை துவங்குவதன் மூலம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கான விரிவான சிகிச்சையை வழங்குவதில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை முன்னணி பங்கு வகிக்கும் எனலாம்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...