கோவையில் தொடர் தற்கொலை சம்பவங்கள்: கல்லூரி மாணவி மற்றும் இளைஞர் உயிரிழப்பு

கோவையில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி சேலையில் தூக்கிட்டும், குனியமுத்தூரில் இளைஞர் மின்விசிறியில் தூக்கிட்டும் உயிரிழந்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவையில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி ஒருவரும், குனியமுத்தூரில் இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

முதல் சம்பவத்தில், நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த அசோக் குமாரின் மகள் கனகவள்ளி (19), கோவை பி.என்.பாளையம் நேதாஜி நகரில் தனது சகோதரி பிரியதர்ஷினியுடன் தங்கியிருந்து பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அக்டோபர் 4 மாலை, கனகவள்ளி தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இரண்டாவது சம்பவத்தில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனாவின் (39) மகன் ஹரிஷ் குமார் (19) தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்த ஹரிஷ் குமார், அக்டோபர் 4 இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து இரவு 9 மணி அளவில் வீடு திரும்பிய அர்ச்சனா, மகனின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் ஹரிஷ் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சம்பவங்களிலும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...