அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். மருத்துவத்துறை, இளைஞர்களின் வாழ்க்கை முறை, அரசியல்வாதிகளின் பொறுப்புகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மருத்துவத்துறை நாட்டில் மிக முக்கியமான துறையாகப் பார்க்கப்படுவதாகக் கூறினார். மருத்துவத்துறையில் உள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆதாயம் தேடாமல் ஆத்மார்த்தமாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதாகவும், நவீன மருத்துவ தொழில்நுட்பம் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கூறினார். மேலும், இந்தியாவில் நோயால் இறப்பவர்களில் 27 சதவீதம் இதய நோயால் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்க அதிகப்படியான விழிப்புணர்வு தேவை என்றும் வலியுறுத்தினார்.

இளைஞர்கள் முந்தைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளைப் பார்க்க வேண்டும் என்றும், மேற்கத்திய கலாச்சார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்திய கலாச்சார வாழ்க்கைப் பழக்கங்களை பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

செல்போன் பயன்பாடு குறித்தும் வெங்கையா நாயுடு எச்சரித்தார். செல்போனை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் அது ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும் என்றும், குழந்தைகள் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அடிமையாகும்போது அவர்களின் வாழ்க்கை பாழாகிறது என்றும் கூறினார்.

இஸ்ரேல்-ஈரான் போரால் தெற்காசிய நாடுகளில் தேவையற்ற குழப்பங்களும் பதற்றமும் உருவாகியுள்ளதாகவும், இது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

இறுதியாக, அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சி தாவலில் ஈடுபடுவது நாட்டுக்கு நல்லதல்ல என்றும், அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...