வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலை 6 மணிக்குப் பின் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலக்குடி - வால்பாறை சாலையில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைக் காண, மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி வாகனங்களை வழிமறிப்பதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

கடந்த மாதங்களில் 'கபாலி' என்ற யானை இச்சாலையில் முகாமிட்டு வாகனங்களை விரட்டியது. தற்போது கடந்த சில நாட்களாக 'கணபதி' என்று வனத்துறையால் பெயரிடப்பட்ட ஒற்றை யானை அடிக்கடி சாலையில் நடமாடுவதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

வால்பாறை, மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதையில் வனப்பகுதியை ஒட்டியே சாலை அமைந்துள்ளதால், யானைகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்கின்றன. எனவே, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாலை 6:00 மணிக்குப் பின் அதிரப்பள்ளி சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் நேற்று (அக்டோபர் 4) அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...