கோவையில் மிதமான மழை: குளிர்ச்சியான சூழலால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது. ஒன்றரை மாதங்களாக நிலவிய கடும் வெப்பத்திற்குப் பிறகு இந்த மழை பொதுமக்களுக்கு நிவாரணம் அளித்தது.



Coimbatore: கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் இன்று காலை மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உருவாகியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என முன்னதாக அறிவித்திருந்தது.

கடந்த ஒன்றரை மாதங்களாக கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை புலியகுளம், உக்கடம், டவுன் ஹால், குனியமுத்தூர், பெரிய கடை வீதி, ராமநாதபுரம், கரும்புகடை, நஞ்சுண்டாபுரம், போத்தனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.



திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவானது. பொதுமக்கள் குடை பிடித்தபடி தங்கள் அன்றாட பணிகளுக்குச் சென்றனர். சிறிது நேரம் பெய்த மழை பின்னர் நின்றுவிட்டது.

கடும் வெப்பத்திற்குப் பிறகு பெய்த இந்த மழை பொதுமக்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கோடை காலத்தின் வெப்பத்தை சமாளிக்க முடியும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...