பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை மையம் திடீர் மூடல்: பயணிகள் அவதி

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பொதுமக்களும், ரயில்வே நல சங்க நிர்வாகிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமான பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை, வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.



ரயில் நிலையத்தில் இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டது.



இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான வால்பாறை பகுதிக்கும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் இருந்த போதும், பயணிகள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. மேலும், தென் மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால், பொதுமக்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திடீரென ஒரு முன்பதிவு சேவை மையத்தை ரயில்வே நிர்வாகம் மூடியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால், மூடப்பட்ட முன்பதிவு சேவை மையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று ரயில்வே நல சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...