உடுமலை அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: திருமணத்திற்கு ஒரு மாதம் முன் இளைஞர் பரிதாப உயிரிழப்பு

உடுமலை அருகே கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் திருமணத்திற்கு ஒரு மாதம் முன் இளைஞர் உயிரிழந்தார். திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது நடந்த இந்த சோகச் சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் திருமணத்திற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சாமி என்கிற சிவராஜின் மகன் கோகுல்நாத், அந்தியூர் பகுதியில் காரில் சென்றபோது விபத்துக்குள்ளானார். கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, அருகிலிருந்த கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்தது.



சீட் பெல்ட் அணியாததால், கோகுல்நாத் காரின் கீழே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது. இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



விபத்து குறித்து கோமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கோகுல்நாத்தின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...