கோவையில் பொதுமக்களுக்கான நடமாடும் R.O தண்ணீர் டிஸ்பென்சர் அறிமுகம்

கோவையில் முதல் முறையாக பொதுமக்களுக்கான மொபைல் டிராலி சைக்கிள் டிஸ்பென்சர் R.O வாட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை மலிவு விலையில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: கோவையில் முதல் முறையாக பொதுமக்களுக்கான மொபைல் டிராலி சைக்கிள் டிஸ்பென்சர் R.O வாட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோவையின் அக்குவா கிளேன் மற்றும் ரேணுகா சைக்கிள் நிறுவனங்களுடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பூர்விகா மொபைல் ஷோரூம் அருகே அறிமுகப்படுத்தப்பட்டது. காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.உசேன் வகாப் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.

இது குறித்து கே.உசேன் வகாப் பேசுகையில், "தமிழ்நாட்டில் வாட்டர் பாக்கெட் தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, பொதுமக்களின் தேவைக்காக இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 250 மில்லி டம்ளரில் சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்குகிறோம்," என்றார்.

இந்த திட்டத்தின் மூலம் வணிக பகுதி, மார்க்கெட் மற்றும் சாலையோர பகுதிகளில் பொதுமக்களுக்கு மலிவு விலையில் சுத்தமான குடிநீர் கிடைக்கும். மேலும், இது வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்று கே.உசேன் வகாப் தெரிவித்தார்.

இந்த திட்டம் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், காவல்துறையினர், கூலித்தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கே.உசேன் வகாப் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.உசேன் வகாப், அக்குவா கிளேன் உரிமையாளர் குருசாமி, ரேணுகா சைக்கிள் உரிமையாளர் லட்சுமணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...