கோவை ஈஷா மையத்தில் விசாரணை நிறைவு; நாளை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாட்கள் நடந்த விரிவான விசாரணை நிறைவடைந்தது. அறிக்கை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கோவை எஸ்.பி கார்த்திகேயன் அறிவித்தார்.


Coimbatore: கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாட்கள் நடந்த விரிவான விசாரணை நிறைவடைந்ததாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். விசாரணை குறித்த அறிக்கை நாளை (அக்டோபர் 4) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 குழுக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈஷா மையத்தில் விசாரணை மேற்கொண்டன.

விசாரணையின் போது, ஈஷா மையத்தில் உள்ள அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருப்பவர்களின் விசா உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. ஈஷா பள்ளி வளாகத்தில் தங்கிப் படிக்கும் குழந்தைகளிடமும், துறவறம் பெற்றுள்ள பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இரண்டாவது நாள் விசாரணையில் சுகாதாரத் துறையினர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மனநல ஆலோசகர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஈஷா மையத்தின் மீதுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளும் ஆய்வு செய்யப்பட்டதாக எஸ்.பி. கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஈஷா யோகா மையம் தொடர்பான அனைத்து விவரங்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும், ஈஷா மையம் கொடுத்திருக்கும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் எஸ்.பி. கார்த்திகேயன் கூறினார். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அரசுத் துறை வாகனங்கள் ஈஷா மைய வளாகத்திலிருந்து வெளியேறின.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...