கோவை மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் துறை பணிகளுக்கான மாதிரி நேர்காணல் - ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 1933 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேர்காணலுக்கு முன் மாதிரி நேர்காணல் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.

இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நேர்காணலுக்கு முன்னதாக, தேர்வர்களுக்கு உதவும் வகையில் மாதிரி நேர்காணல் ஒன்று நடத்தப்பட உள்ளது.

இந்த மாதிரி நேர்காணல் அக்டோபர் 4 ஆம் தேதி கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த மாதிரி நேர்காணலில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

மாதிரி நேர்காணலில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் அருகே அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, 9361576081 என்ற தொலைபேசி எண் வழியாகவோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...