கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தி: இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் MLA பி.ஆர்.ஜி.அருண்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பெண்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தினர். துடியலூர் கார் ஸ்டேண்டு அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் வி.ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார்.



சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தி ஐ பவுண்டேசன் மருத்துவர்களான டாக்டர் அலிசா, டாக்டர் ஜெகநாதன் மற்றும் செவிலியர்கள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை உறுப்பினர்களான ராஜன், செல்வி பானுபிரியா, தமிழரசி, பார்த்தசாரதி, வெங்கடேசன், அருண்குமார், சுதாகர் ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அறக்கட்டளை செயலாளர் கண்ணதாசன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...