திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்-வாக்கத்தான்: 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருப்பூர் காந்திநகரில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. 1350 மாணவர்கள் மாரத்தானிலும், 1900 பேர் வாக்கத்தானிலும் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் காந்திநகரில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும், புற்றுநோய்க்கு எதிராகவும் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தன்னார்வ அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

திருப்பூர் மாநகர காவல் துணை கமிஷனர் அசோக் கிரீஸ் யாதவ் கொடியசைத்து மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் அதே மைதானத்தில் நிறைவடைந்தது.



மாரத்தான் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், வாக்கத்தான் அனைத்து வயது பிரிவினருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது. மினி மாரத்தான் மற்றும் வாக்கத்தானுக்கு 5 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.



17 வயதுக்குட்பட்ட 1350 மாணவ-மாணவிகள் மாரத்தானிலும், 1900 பேர் வாக்கத்தானிலும் என மொத்தம் 3000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி மூலம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...