உடுமலையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உடுமலை வட்டக் கிளை சார்பாக சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. வட்டக்கிளை செயலாளர் வெங்கடுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உடுமலை வட்டக் கிளை சார்பாக நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை செயலாளர் வெங்கடுசாமி தலைமை வகித்தார்.



அனைத்துறை ஓய்வூதிய சங்க வட்ட கிளை தலைவர் தாசன் கண்டன உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நிர்வாகிகள் பேசினார்கள். இந்த நிகழ்வில் சிவக்குமார், பாலசுப்பிரமணியன், அம்சராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிறைவாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நன்றி உரை கூறினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...