மனிதக் கழிவுகளை நீராக மாற்றும் பாக்டீரியா பவுடர்: திருப்பூர் நிறுவனம் அறிமுகம்

திருப்பூரில் ஒரு நிறுவனம் மனிதக் கழிவுகளை நீராக மாற்றும் பாக்டீரியா பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விஷவாயு தாக்குதல்களைத் தடுக்கவும், மனிதக் கழிவு அகற்றும் முறையை மாற்றவும் உதவும்.



திருப்பூர்: மனிதக் கழிவுகளை அகற்றும்போது ஏற்படும் விஷவாயு தாக்குதல்களால் தொழிலாளர்கள் உயிரிழப்பதைத் தடுக்கவும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றவும், திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனம் மனிதக் கழிவுகளை நீராக மாற்றும் பாக்டீரியா பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மைக் காலங்களில், மனிதக் கழிவுகளை அகற்றும்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவங்களும், வீடுகளில் விஷவாயு பரவி பொதுமக்கள் இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

மேலும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களால் எடுத்துச் செல்லப்படும் கழிவுகள் சில இடங்களில் திறந்த வெளியில் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

இந்த பிரச்சினைகளைத் தீர்க்க, ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற திருப்பூர் நிறுவனம் ஒன்று மலக்கழிவுகளை நீராக மாற்றும் திறன் கொண்ட பாக்டீரியா பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பவுடரை கழிவறையில் நீரில் கலந்து ஊற்றும்போது, அது நேரடியாக செப்டிக் டேங்கிற்குச் சென்று மலக்கழிவுகளை டைலூட் செய்துவிடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.



செப்டிக் டேங்கில் உள்ள மலக்கழிவுகள் நீராக மாறிய பின்னர், அதனை விவசாய பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சோக்பிட், செப்டிக் டேங்க் போன்ற இடங்களில் தேங்கியுள்ள கழிவுகளை இந்த பவுடரைக் கொண்டு மக்கச் செய்து நீராக மாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியா பவுடர் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் இந்த பவுடர் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...