சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை: லீமா ரோஸ் மார்ட்டினுக்கு ரோட்டரி சங்கம் கௌரவிப்பு

கோவையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்வில், சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை வழங்கிய லீமா ரோஸ் மார்ட்டின் செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். வயநாடு நிவாரணம், கோவை சிசிடிவி திட்டம் மற்றும் மாணவர் விஞ்ஞான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.


கோவை: கோவையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்வில், சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை வழங்கிய லீமா ரோஸ் மார்ட்டின் செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு அக்டோபர் 1 அன்று கலைஞர் கருணாநிதி கல்லூரியில் நடைபெற்றது.

லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கிய நன்கொடையில், வயநாடு பேரிடர் நிவாரணத்திற்கு ரூ.2 கோடியும், கோவை 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் சிசிடிவி பொருத்தும் பணிக்கு ரூ.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 'மிஷன் ரூமி-2024' திட்டத்தின் கீழ் 6000 அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து இந்தியாவின் முதல் மறுபயன்பாடு ஹைபிரிட் ராக்கெட் உருவாக்கத்திற்கு ரூ.4 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.

ரோட்டரி சங்கத்தின் TRF கருத்தரங்கில், "நம்பிக்கையின் மலர்கள்" எனும் தலைப்பில் பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக சேவைகளுக்கு நிதி திரட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞரும் ரோட்டரி ஆளுநருமான சுந்தர வடிவேலு, வழக்கறிஞர் முருகாம்பாள் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் இணைந்து லீமா ரோஸ் மார்ட்டினுக்கு செங்கோல் வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்ச்சியில் பிளாட்டினம் சேர் சர்கிள் ரவிசங்கர், இலங்கையைச் சேர்ந்த கௌரி ராஜன், புப்புடு டி சொய்சா, சகுந்தலா ராஹா, ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் (இந்தியா), முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, பி.டி.ஜி. எம். ஜோஸ் சாக்கோ, செல்ல ராகவேந்திரா, பத்மகுமார், ஆர்.ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...