பி.எஸ்.என்.எல் 25வது ஆண்டு விழா: கோவையில் ஊழியர்கள் பேரணி

கோவை ரேஸ்கோர்ஸில் பி.எஸ்.என்.எல் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பேரணி நடத்தினர். பலூன்கள், பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்ற ஊழியர்கள் நிறுவனத்தின் சேவைகளை விளம்பரப்படுத்தினர்.



கோவை: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தின் 25வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

அக்டோபர் 1ஆம் தேதி பி.எஸ்.என்.எல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.



பேரணியில் பங்கேற்ற ஊழியர்கள் கைகளில் பலூன்களையும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகளை விளக்கும் பதாகைகளையும் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணி மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகளை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்தனர்.



இந்த நிகழ்வில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் விதமாக நடத்தப்பட்ட இந்த பேரணி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சியையும், மக்களுக்கான அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...