14 ஆண்டுகளுக்குப் பிறகு மாமியார் கொலை வழக்கில் குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 2010ல் நடந்த மாமியார் கொலை வழக்கில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாமியார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூரில் மறைந்திருந்த குற்றவாளியை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர்.

2010 ஆம் ஆண்டு, மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் வசித்து வந்த ராஜன் (45) என்பவர் குடும்பத் தகராறில் தனது மனைவி பத்மாவதி மற்றும் மாமியார் காளியம்மாள் (50) ஆகியோரை அரிவாளால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த காளியம்மாள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்குப் பின் ராஜன் தலைமறைவானார்.



இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த ராஜனை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். ராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியைக் கைது செய்த மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினருக்கு மாவட்ட காவல் துறை சார்பாக டிஎஸ்பி ஆறுமுகம் பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...