தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவர் மூன்று வெண்கலப் பதக்கங்கள் வெற்றி

பிலிப்பைன்ஸின் மனிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி மாணவர் பிரணவ் அருண்பிரசாத் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றார். 11 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குமரகுரு லிபரல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பிரணவ் அருண்பிரசாத், பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். செப்டம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், பிரணவ் அருண்பிரசாத் இந்திய அணி சார்பில் ஜூனியர் A பிரிவில் (17-19 வயது) பங்கேற்றார்.

இப்போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சீனா, ஹாங்காங், மங்கோலியா, சிங்கப்பூர், வியட்நாம், உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பிரணவ் அருண்பிரசாத் தனது வயது பிரிவில் 500, 1000 மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் முறையே மூன்றாம் இடம் பிடித்து மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.



குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே வீரர் பிரணவ் அருண்பிரசாத் ஆவார். கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரணவ் அருண்பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், போட்டிகளில் பங்கேற்க உண்டான தொகையான 1,95,000 ரூபாயை தமிழக அரசின் சார்பில் நேரில் வழங்கி வாழ்த்தினார்.



போட்டிகளில் வெற்றி பெற்ற பிரணவ் அருண்பிரசாத், அக்டோபர் 1 ஆம் தேதி காலை 8:00 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பி வருகிறார். இந்த சாதனை மூலம் கோவை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் பிரணவ் அருண்பிரசாத்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...