ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், பேராசிரியர் காமராஜ் மகள்கள் விவகாரம் தொடர்பாக ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.



Coimbatore: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, கோவை மாவட்டம் ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை பேராசிரியர் காமராஜ் மகள்கள் தொடர்பான சர்ச்சையின் அடிப்படையில் நடைபெற்றது.

பேராசிரியர் காமராஜ் தனது மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருப்பதாகவும், அவர்களை சந்திக்க ஈஷா அனுமதி மறுப்பதாகவும் தெரிவித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், அவரது மகள்கள் இருவரும் ஈஷா யோகா மையத்தில் துறவியாக மாற்றப்படுவதாகவும், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

காமராஜர் தனது மனுவில், ஈஷா யோகா மையத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதாகவும், ஒரு மருத்துவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, ஈஷா மையத்துக்கு எதிரான குற்ற வழக்குகளின் விவரங்களை மனுதாரரும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், காமராஜரின் மூத்த மகள் கீதா, தனது தந்தைக்கு மொபைல் போனின் வாயிலாக தொடர்பு கொண்டு, ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை இளைய சகோதரி லதா உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஈஷா யோகா மையத்தில் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...