கோவையில் கஞ்சா விற்ற மாணவர்கள் உட்பட 4 பேர் கைது: 220 கிராம் கஞ்சா பறிமுதல்

கோவை குனியமுத்தூர் போலீசார் ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர். இதில் இரண்டு மாணவர்களும் அடங்குவர். மொத்தம் 220 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று (செப்டம்பர் 29) மேற்கொண்ட ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர். இதில் இரண்டு கல்லூரி மாணவர்களும் அடங்குவர். சம்பவம் குறித்த விவரம்:

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று (செப்.29) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கே.கே. நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாசில் (21), மற்றும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படிக்கும் 2 மாணவர்கள் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ஒரு எடை மெஷின் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போன்று, எல்ஜி தோட்டம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை செய்த கெம்பட்டி காலனியை சேர்ந்த பாலாஜி (29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...