கோவை தெலுங்குபாளையத்தில் கத்தி முனையில் செல்போன், பணம் பறித்தவர் கைது

கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் நேற்று (செப்டம்பர் 29) நடந்தது.


கோவை: கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தெலுங்குபாளையம் சுப்பிரமணிய உடையார் தெருவைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று (செப்டம்பர் 29) அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் நின்றிருந்த மனோஜை, அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தி முனையில் மிரட்டினார். பின்னர் மனோஜிடம் இருந்த ரூ.1,400 மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து மனோஜ் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போன் மற்றும் பணத்தை பறித்தவர் தெலுங்குபாளையம் சிவசக்தி நகரைச் சேர்ந்த ரஞ்சித் குரு (39) என்பவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...