மேட்டுப்பாளையத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் வலசை: சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து

மேட்டுப்பாளையத்தில் பருவமழைக்கு முன் வண்ணத்துப்பூச்சிகள் வலசை தொடங்கியுள்ளன. கல்லார், சிறுமுகை பகுதிகளில் கூட்டம் கூட்டமாக பறக்கும் பூச்சிகள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து வண்ணத்துப்பூச்சிகள் வலசை செல்லத் தொடங்கியுள்ளன. இந்த அழகிய காட்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், நீலகிரி மலைத்தொடரின் அடிவாரப் பகுதியாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதியாகவும் விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள மலைத்தொடர்களில் இருந்து உருவாகும் காட்டாறுகள் அனைத்தும் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் கலக்கின்றன.



தற்போது வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே, மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மலைக்காலத்தின் துவக்கத்தை அறிவிக்கும் வகையில், நீலகிரி மலைத்தொடர்களில் இருந்து பல்வேறு வண்ணங்களைக் கொண்ட பட்டாம்பூச்சிகள் தங்கள் வலசையைத் தொடங்கியுள்ளன.

மேட்டுப்பாளையம், சிறுமுகை, கல்லார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக வலசை செல்வதைக் காணலாம். இந்த வண்ணத்துப்பூச்சிகள் பவானி ஆறு, கல்லாறு போன்ற நீர்நிலைகளின் கரையோரப் பகுதிகளில் வெள்ளை, கருப்பு, ஊதா போன்ற பல்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன.



உதகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த வண்ணத்துப்பூச்சிகள், வடகிழக்கு பருவமழைக் காலத்தை உணர்ந்து தங்கள் இடப்பெயர்ச்சியைத் தொடங்கியுள்ளன. வலசை செல்லும்போது, இவை தங்கள் பறக்கும் திறனை மேம்படுத்த ஆற்றங்கரைகளில் உள்ள உப்புச் சத்தை உறிஞ்சி, நீண்ட பயணத்திற்கு வலிமை பெறுவதாக பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மேட்டுப்பாளையத்தில் எங்கு பார்த்தாலும் சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சிகள் மக்களின் மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...