கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே மோதல்: மாணவி உள்பட 5 பேர் கைது

கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், மாணவர்களை கத்தியால் வெட்டிய மாணவி உள்பட 5 பேரை மதுக்கரை போலீஸார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் விடியோ பதிவிடுவது தொடர்பான தகராறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்தது.


Coimbatore: கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், மாணவர்களை கத்தியால் வெட்டிய மாணவி உள்பட 5 பேரை மதுக்கரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம் பட்டியைச் சேர்ந்த வீரண்ணன் மகன் கிஷோர் (19), கோவை மதுக்கரை பகுதியில் தனது சகோதரி மோனிகாவுடன் வசித்து வந்தார். இவர் திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சனிக்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவின் போது, இன்ஸ்டாகிராமில் விடியோ பதிவிடுவது தொடர்பாக இரண்டாம் ஆண்டு மாணவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டது.

விழா முடிந்த பின், மதுக்கரை பகுதியில் உள்ள உணவகத்தில் கிஷோர் தனது நண்பர்களுடன் இருந்தபோது, இரண்டாம் ஆண்டு மாணவர் அழகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை அழைத்துச் சென்று தாக்கினர். இதில் கிஷோர் மற்றும் அவரது நண்பர் ரோஷன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், கிஷோரின் சகோதரி மோனிகா (21) மற்றும் உறவினர் பிரவீசன் (21) ஆகியோர் கிஷோரைத் தேடி வந்தபோது, இரண்டாம் ஆண்டு மாணவர்களான முகேஷ், நிதீஷ்குமார், சபரிபாலா கண்ணன் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோனிகா, கீழே கிடந்த கத்தியால் மூவரையும் வெட்டி காயப்படுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மோனிகா, பிரவீசன், முகேஷ், ராஜேஸ்வரன், யுவராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும், அழகேஸ்வரன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கல்லூரி மாணவர்கள் என்பதால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...