உலக இதய தினம்: பொள்ளாச்சியில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: உலக இதய தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் மாரடைப்பு குறித்து இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை தனியார் இருதய மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் தொடங்கிய பேரணி கோவை சாலை, பல்லடம் சாலை, புதிய திட்ட சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் நிறைவடைந்தது. மாரடைப்பு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



இருதய நோய், குறிப்பாக மாரடைப்பு நோய் உலகளவில், அதுவும் இந்தியாவில் மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மாரடைப்பு நோய் தான் மனித இனத்தை அழிக்கும் முதல் நோயாக கருதப்படுகிறது. 40 சதவீத மனித உயிர்கள் இழப்பிற்கு காரணம் மாரடைப்பு நோய் என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டின் முடிவில் 25 சதவீத இந்திய மக்களை மாரடைப்பு நோய் பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 வினாடிகளுக்கு ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பது வேதனையானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட், செஸ் விளையாட்டுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது பெருமை, ஆனால் மாரடைப்பில் முதலிடம் என்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே இளைஞர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் உடற்பயிற்சி, யோகா, உணவு பழக்க வழக்கங்களை மாற்றி இந்த நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...