ஈஷா யோகா மையத்தின் மீதான அவதூறுகளுக்கு எதிராக காவல் துறையில் புகார்

கோவையில், ஈஷா யோகா மையத்தின் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி, மையத்தின் தன்னார்வலர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். சமூக ஊடகங்களில் பரவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை எதிர்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மையத்தின் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ், "ஈஷா யோகா மையம் செய்யும் பல்வேறு நன்மையான வேலைகளுக்கும் தொண்டுகளுக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல காலங்களாக சிலர் பொய்யான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்" என்று தெரிவித்தார். மேலும், "அவர்களிடம் ஏதேனும் முகாந்திரம் இருந்தால் நீதிமன்றத்தையோ காவல்துறையையோ அணுகி தீர்வு கண்டிருக்கலாம்" என்றும் கூறினார்.

தினேஷ் மேலும் கூறுகையில், "ஒரு குழுவாக இணைந்து கொண்டு அவர்களுக்கு குழுவிற்கென்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அந்த குழுவில் இருக்கும் பல பேரின் பின்னணி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்" என்றார். அவர்கள் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுவதாகவும், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் எழுப்பப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், தீர்ப்பு வரும்பொழுது முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் தினேஷ் தெரிவித்தார்.

குறிப்பாக காமராஜ் என்பவர் சமீப காலமாக தொடர்ந்து ஈஷா மீது அவதூறு பரப்புவதாகவும், அவரது இரண்டு மகள்களே ஈஷாவில் தன்னார்வலர்களாக இருப்பதாகவும் தினேஷ் குறிப்பிட்டார். "காமராஜ் அவரது மகள்களை சந்தித்து இனிப்புகள் வழங்கி செல்கிறார். ஆனால் அதே சமயம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அவர்கள் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் எங்களிடம் உள்ளன" என்று தினேஷ் தெரிவித்தார்.

இறுதியாக, "ஈஷா மீது தற்போது குற்றம் சாட்டும் நபர்கள் எவரிடமும் எந்த ஒரு முகாந்திரமும் ஆதாரமும் இல்லை" என்று தினேஷ் வலியுறுத்தினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...