பத்மஸ்ரீ விருது பெற்ற 110 வயது தேக்கம்பட்டி பாப்பம்மாள் காலமானார்

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் 110 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். இயற்கை விவசாயத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர், அண்மையில் பெரியார் விருதும் பெற்றிருந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 110 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவு காரணமாக இன்று இரவு 8:30 மணியளவில் காலமானார்.

விவசாயத்தின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த பாப்பம்மாள் பாட்டி, தனது உயர்ந்த வயதிலும் தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இவரது விவசாய ஆர்வத்தைப் பாராட்டி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

விருது வழங்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது.

வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, அண்மைக் காலமாக படுக்கையிலேயே இருந்து வந்த பாப்பம்மாள் பாட்டி இன்று இரவு காலமானார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் பாட்டியின் மறைவு விவசாய சமூகத்திற்கும், இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது.

Newsletter

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...

கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆல...

கோவை மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகள் - செந்தில் பாலாஜி பாராட்டு

கோவை வெள்ளலூரில் உள்ள Agaram Kids Montessori பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகளை செய்து சா...

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...

ஓணம்பாளையம் குடியிருப்பில் கஞ்சா செடி பறிமுதல் - வட மாநில தொழிலாளர்கள் விசாரணையில்

வடவள்ளி அருகே ஓணம்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் 4 அடி உயர கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டது. கா...