கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவுநாளும், மாவட்ட தலைவர் வே.கௌதம்குமார் நினைவுநாளும் மார்ச் 22 அன்று அனுசரிக்கப்பட்டது. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட P.N.புதூரில் மார்ச் 22 அன்று விடுதலை போராட்ட மாவீரர்களின் நினைவுநாள் அனுசரிப்பு நடைபெற்றது.



அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக விடுதலை போராட்ட இளம் வீரர்களான தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவுநாளும், மாவட்ட தலைவர் வே.கௌதம்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளும் கொண்டாடப்பட்டது.







நிகழ்ச்சியில் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. P.N.புதூர் கிளை விதாத் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான K.சாந்தி, மண்டல செயலாளர் N.சந்திரன், AIYF மண்டல தலைவர் புஷ்பராஜ், மாதர் சங்க மண்டல செயலாளர் செல்வி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோவை மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்த தோழர் வே.கௌதம்குமார் கடந்த ஆண்டு (2024) மார்ச் 23 அன்று சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார்.







விடுதலை போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த நாளிலேயே பிறந்து, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளிலேயே இறந்த தோழர் கௌதம்குமார் அவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...