பத்மஸ்ரீ விருது பெற்ற 110 வயது தேக்கம்பட்டி பாப்பம்மாள் காலமானார்

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் 110 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். இயற்கை விவசாயத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர், அண்மையில் பெரியார் விருதும் பெற்றிருந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 110 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவு காரணமாக இன்று இரவு 8:30 மணியளவில் காலமானார்.

விவசாயத்தின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த பாப்பம்மாள் பாட்டி, தனது உயர்ந்த வயதிலும் தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இவரது விவசாய ஆர்வத்தைப் பாராட்டி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

விருது வழங்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது.

வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, அண்மைக் காலமாக படுக்கையிலேயே இருந்து வந்த பாப்பம்மாள் பாட்டி இன்று இரவு காலமானார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் பாட்டியின் மறைவு விவசாய சமூகத்திற்கும், இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...