கோவை மாவட்டத்தில் சலவைத் தொழிலாளர்களுக்கு தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் சலவைத் தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சமையல் எரிவாயுவால் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், சலவைத் தொழில் மேற்கொள்ளும் ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக சமையல் எரிவாயுவால் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல இன மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சலவைத் தொழிலை மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், சமையல் எரிவாயு பயன்படுத்தி இயக்கப்படும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சலவைத் தொழிலில் ஈடுபடுவோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். தகுதியுள்ள பயனாளிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...