கோவையில் நாளை 'மக்களைத் தேடி மாநகராட்சி' திட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் அறிவிப்பின்படி, பொதுமக்களின் சேவைகளை விரைவுபடுத்த 'மக்களைத் தேடி மாநகராட்சி' திட்டம் நாளை (செப்.26) காமராஜர் ரோடு மணி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இன்று (செப்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது சேவைகளை விரைவாக பெறும் வகையில் 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்ற சிறப்புமிக்க திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், கோவை கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட காமராஜர் ரோடு மணி மஹால் திருமண மண்டபத்தில் நாளை (செப்.26) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து, அவற்றிற்கான தீர்வுகளை பெற முடியும். மேலும், பல்வேறு மாநகராட்சி சேவைகளை இந்த முகாமில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...