உலக மருந்தாளுநர்கள் தினம்: கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவையில் உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்து சங்கம் சார்பில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேரணியை தொடங்கி வைத்தார்.



Coimbatore: உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. "மருந்தாளுநர்கள்: உலகளாவிய சுகாதாரத் தேவைகளை சந்தித்தல்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த பேரணிக்கு எஸ்.என்.எஸ் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்து சங்கம் (IPA) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.



பேரணியில் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு மருந்தியல் கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மருந்து பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருந்தாளுநரின் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் பதாகைகளை மாணவர்கள் பேரணியின் போது ஏந்தி சென்றனர்.

இந்த பேரணியானது கோவை ரேஸ் கோர்ஸ், ஸ்ரீ சாரதாம்பாள் கோவில் அருகே 2.5 கிலோமீட்டர் தொலைவு வரை தொடங்கி முடிந்தது. மருந்தாளுநர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் சேவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கமாக இருந்தது.



Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...