கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: கோபனரி சோதனைச் சாவடியில் தீவிர பரிசோதனை

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, கோபனரி எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


கோவை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு-கேரள எல்லையான கோபனரி பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.



கோபனாரி காவல் சோதனைச் சாவடியில் காரமடை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரவின், செவிலியர் விஜயலட்சுமி, மருந்தாளுனர் ஆண்டனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு மற்றும் சிவராஜ் ஆகியோர் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வாகனங்களில் பயணிப்பவர்களை உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர்.

உடல் நிலையை கண்காணித்து, பின்னரே கேரளாவில் இருந்து வருபவர்களை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. சுகாதாரத்துறையின் கூற்றுப்படி, இந்த கண்காணிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெறும். நிபா வைரஸ் பரவலைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...