மேயர் வடவள்ளி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்

கோயம்புத்தூர் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வடவள்ளி மற்றும் மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். மேலும், கல்வீரம்பாளையம் கொங்கு நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகப் பணிகளையும் பார்வையிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சனிக்கிழமை (செப்டம்பர் 23) வடவள்ளி மற்றும் மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேற்கு மண்டலம், வார்டு எண் 37க்குட்பட்ட இப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் கல்வீரம்பாளையம், கொங்கு நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



கொங்கு நகரில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தரைதளம் அமைப்பதற்கான உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வுப் பணியில் மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் குமுதம், உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகர திட்டமிடுநர் காந்திமதி, உதவி பொறியாளர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் வீரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...