தொண்டாமுத்தூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: டாஸ்மாக் கடை சீல் வைப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே சட்டவிரோத மது விற்பனை புகார் அடிப்படையில் காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. அதிகாரிகள் டாஸ்மாக் கடையை சீல் வைத்தனர். வித்தியாசமான முறையில் சீல் வைக்கப்பட்டது நகைச்சுவையை ஏற்படுத்தியது.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூரில் இருந்து நரசிபுரம் செல்லும் சாலையில் அதிகாலைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 22) காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், அங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார் முழுவதையும் தகர தகடுகளைக் கொண்டு மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.



பேரூர் தாசில்தார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். அவர், டாஸ்மாக் பார் கடையின் ஊழியர்கள் படுத்து உறங்க வைத்திருந்த இரண்டு வயர் கட்டில்களை எடுத்து ஒன்றிணைத்து, அதில் கம்பி கட்டி பூட்டி சீல் வைத்தார். இந்த வித்தியாசமான முறையில் சீல் வைக்கப்பட்டதை பார்த்த மது பிரியர்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றனர்.

உயர் அதிகாரிகள் தகர தகடுகளை முழுவதுமாக மூடி சீல் வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், படுத்து உறங்கும் வயர் கட்டில் வைத்து மூடி சீல் வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வித்தியாசமான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நடவடிக்கை சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...